விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவரும் பட்டுவேட்டி சட்டையில் ஜொலிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கஸ்தூரியும் அவரது கணவரும் இணைந்து வாசலில் நாதர்ஸ்வரமும் தவிலும் வாசிக்க விழா மேலும் சிறப்பித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்ப கதை அமைப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதனாலேயே அனைவரும் மத்தியிலும் பிரபலமானது. மேலும் முக்கிய பிரபலங்கள் பலரும் இந்த சீரியலில் நடித்து வருவதால் இந்த சீரியலுக்கு மவுசு அதிகம்.
தனது தம்பிகளுக்காக இவ்வளவு தூரம் உழைத்து வரும் மூர்த்தி தன் வாழ்க்கையையே இழந்து விட்டார். இதனாலேயே மூர்த்தி கதாபாத்திரத்தின் மேல் அதிக மரியாதை ஏற்பட்டது. அதன் பின் 2 தம்பிகளுக்கு திருமணம் ஆக தற்போது குடும்பமே கொண்டாட்டத்தில் உள்ளது.
என்ன தான் சண்டைகள் வந்தாலும் சில மணி நேரத்திலேயே ஒன்று சேர்ந்து விடுவது என குடும்பமே ஒற்றுமையாக உள்ளது. அதிலும் தனம் கர்ப்பமாக மேலும் வீடே கோலாகலமானது. இதனிடையே தற்போது தனத்திற்கு வளைகாப்பு விழா நடக்கவுள்ளது.
இதனால் ஆட்டம் பாட்டம் என அனைவரும் குதூகலத்தில் உள்ளனர். இப்படி இருக்க தற்போது வளைகாப்பு விழா மேடையில் தனத்தின் அண்ணியும் அண்ணனும் இணைந்து வாசலில் நாதர்ஸ்வரமும் தவிலும் வாசிக்க விழா மேலும் சிறப்பித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்