கடவுள் சொன்னதாக சொல்லி பாட்டியை கல்லால் அடித்து கொன்ற சிறுவன் – ஆன்லைன் விளையாட்டால் வந்த விபரீதம்!!

0

ஆன்லைன் விளையாட்டினால் மனம் நலம் பாதிக்கப்பட்ட இளைஞன் தனது பாட்டியை கல்லால் அடித்து கொன்ற கொடூர சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் அரங்கேறியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டு:

முந்தைய காலங்களில் இளைஞர்கள் வெளியே சென்று உடல் மற்றும் மனதிற்கு நலன் பெரும் வகையில் பல வகையான விளையாட்டுகளை விளையாடி வந்தனர். ஆனால் இந்த காலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் மூழ்கி கிடக்கின்றனர். மேலும் கடந்த லாக்டவுன் காலத்தில் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஆன்லைன் கேமில் தான் மூழ்கி கிடந்தனர். இதனால் சில மாணவர்கள் மனநலம் பாதிப்புக்கு உள்ளாகினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் தற்கொலை செய்தும் பிறரை கொலை செய்தும் வந்தனர். இதனால் நாட்டில் ஆன்லைன் கேமின் பாதிப்பு சற்று அதிகரித்து வந்தது. இதனால் பெற்றோர்கள் அனைவரும் இதனை எதிர்த்து வந்தனர். மேலும் மத்திய மற்றும் மாநில அரசும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது கள்ளக்குறிச்சி பகுதியில் ஓர் கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் பகுதியில் ஓர் தனியார் கல்லூரியில் வேளாண் படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் ஹரிஹரன்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இவர் தொடர்ந்து ஆன்லைன் கேமினை விளையாடியதால் இவர் மனநல பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் இவர் அதற்காக சிகிச்சையும் மேற்கொணர். சிகிச்சை எடுத்த நிலையில் ஹரிஹரன் தனது பாட்டி ஊரான உளுந்தூர்பேட்டை எல்லை கிராமத்திற்கு வந்தார். அங்கு வந்த அவர் நள்ளிரவில் தனது பாட்டி மாரியிடம் கடவுள் சொன்னதாக கூறி அவரை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தகவல் அறிந்த போலீசார் ஹரிஹரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here