இந்த நேரத்தில் இந்த சோதனை தேவையா? வடகொரியாவின் ஏவுகணை சோதனை!

0

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் உலகெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியா வின் பியோங்யாங் கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை இன்று(மார்ச்-29) சோதனைசெய்துள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை செயல், ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என அதன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஏவுகணை சோதனை

வடகொரியா வின் பியோங்யாங் கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை இன்று(மார்ச்-29) சோதனைசெய்துள்ளது.  வடகொரியா  உலகமே கொரோனா வைரசால் ஒருபக்கம்  மக்களை இழந்துகொண்டிருக்க இன்னொருபக்கம் உலகமே கொரோனாவை  எதிர்த்து தீவிரமாக போராடி வரும் நிலையில், வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை செயல், ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என அதன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா..? மத்திய அரசு விளக்கம்..!

வடகொரியாவின் இந்த சோதனையை பற்றி தென்கொரியா இணை படைத்தளபதி கூறியதாவது: “வடகொரியாவின் வோன்சான் கடற்கரையில் இருந்து, குறுகிய தொலைவு சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த ஏவுகணை 230 கி.மீ தொலைவுக்கு 30கி.மீ உயரத்தில் சென்றது. உலக நாடுகள், கோவிட்-19 வைரஸால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் சூழலில், வடகொரியாவின் இந்த நடவடிக்கை முற்றிலும் அர்த்தமற்றதாக  உள்ளது” என தெரிவித்தார்.

வட கொரிய ஏவுகணை, தங்கள் பகுதியில் விழவில்லை என தெரிவித்துள்ள ஜப்பான், என்றாலும் அந்நாட்டின் செயல் சர்வதேச உலகிற்கு அச்சுறுத்தல் தருவது  என தெரிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here