இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா..? மத்திய அரசு விளக்கம்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வரும் வாரங்களில் கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமடையும் என்பதால் ஊரடங்கு உத்தரவு மேலும் பல நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வந்தது குறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் 1000க்கு மேல் பாதிப்பு..!

இந்தியாவில் இதுவரை 1024 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது மேலும் 27 பேர் உயிர் இழந்துள்ளனர். இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா சமூகப்பரவலாக மாறாமல் தடுக்க வரும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரும் மாதங்களில் தான் கொரோனாவின் தாக்கம் தீவிரமடையும் என்பதால் ஊரடங்கு மேலும் பல நாட்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் அந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானது என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. மேலும் இந்தியாவில் தற்போதைக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here