உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் தலையை பிய்த்துக் கொண்டு உள்ளன.
33 ஆயிரத்தை தாண்டியது..!
உலகளவில் இதுவரை 7,22,088 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 33,976 ஆக உள்ளது. மேலும் இதுவரை 1,51,766 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்காவும், அதிகம் உயிர் இழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலியும் உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 1,42,070 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 2,484 பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 97,689 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 10,779 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அங்கு 81,470 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 3,304 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
இந்தியாவில் 1000ஐ தாண்டியது..!
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை 1,024 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 27 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |