தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறத. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கையறைகளைக் கொண்ட தனி சிகிச்சை மையமும் தயாராக உள்ளது.
50 பேர்க்கு பாதிப்பு..!
தமிழகத்தில் 42 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 8 பேர்க்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
அவர்கள் அனைவரும் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக உள்ளது. இனி வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு பலமடங்காகும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |