சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் விதமாக சீன மார்க்கெட்டுகளில் பாம்பு, நாய், பூனை, தேள், வவ்வால்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை மீண்டும் தொடங்கியது.
இயல்பு நிலைக்கு திரும்பிய சீனா..!
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் ஒரு கடல் உணவு சந்தையிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. எனினும் இங்கிருந்து பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
உலகம் முழுவதும் இன்னும் கொரோனாவை எதிர்த்து போராடி வருகின்றனர். கொரோனா வைரசால் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வந்த கொரோனா சீனாவில் தற்போது கட்டுக்குள் காணப்படுகிறது. வுகான் மாகாணத்தில் ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முதல் போக்குவரத்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மீண்டும் இறைச்சி கடை..!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மற்ற நாடுகள் முடங்கிய நிலையில் தற்போது சீனா பொருளாதாரத்தை உயர்த்த மீண்டும் இறைச்சிக் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் அங்கு இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா குறைந்ததை கொண்டாட மீண்டும் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
குயிலினில் ஒரு சந்தையில் புதிய நாய், பூனைகள் சலுகை விலைக்கு வழங்கப்பட்டன. நாய்களும் பூனைகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய மருந்தாக வவ்வால்களும் தேள்களும், முயல்களும் கருதப்படுகின்றன. தோல் உரிக்கப்பட்ட வாத்துகளும் முயல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |