தனது உடைகளை ஏலம் விடும் நித்யா மேனன் – எதற்காக தெரியுமா..?

0

நடிகை நித்யா மேனன் பேஷன் ஷோவில் பயன்படுத்திய உடைகள் மற்றும் படங்களில் பயன்படுத்திய உடைகளை கொரோனா பாதிப்பு நிவாரணத் தொகைக்காக தனது உடைகளை ஏலம் விட்டு வருகிறார்.

நடிகை நித்யா மேனன்:

தமிழில் ஓகே கண்மணி, 24, மெர்சல் போன்ற படங்களில் நடித்தவர் நித்யா மேனன். இவர் தான் பயன்படுத்திய உடைகளை ஏலம் விடத் தொடங்கி உள்ளார். இதில் வரும் 100 சதவீத பணமும் கொரோனவால் பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை மக்களுக்கு உதவும் டிரஸ்ட்க்கு போகும் என தெரிவித்து உள்ளார். இது கொரோனவால் முடங்கி உள்ள அவர்களை மீண்டும் சொந்த காலில் நிற்க வைக்கும் என நித்யா மேனன் கூறுகிறார்.

ஏலம் விடப்படும் உடைகள் பல மாதங்கள் சிரமப்பட்டு எனது தோழியும் பிரபல டிசைனரும் ஆன காவேரி தயாரித்தது என தெரிவித்துள்ளார். இது எனக்காகவே ஸ்பெஷல் ஆக பேஷன் ஷோவில் ரேம்ப் வாக் செய்வதற்காக தயாரிக்கப்பட்டது என நித்யா மேனன் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here