பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் குறித்த மேலும் சில அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுகிறார்.
நிதியமைச்சகம் அறிவிப்பு:
பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு 5வது முறையாக உரையாற்றிய பொழுது கொரோனவால் நலிவடைந்து உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார். அதற்கான முதற்கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை அறிவித்தார். அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
‘தன்னிறைவு இந்தியா’ – ரூ. 20 லட்சம் கோடி திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன்..! முழு விபரங்கள்..!
20 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களில் நேற்று ரூ. 3.60 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை வெளியிட்டார். இந்நிலையில் மேலும் சில அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |