கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்த விபரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
நிதியமைச்சரின் அறிவிப்புகள்:
மத்திய அரசின் இப்புதிய 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ‘தன்னிறைவு இந்தியா’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய வரையறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. ரூ. 3 லட்சம் கோடி மதிப்பில் சிறு, குறு நிறுவனங்களுக்கு எவ்வித பிணை ஆவணங்களும் இன்றி கடனுதவி வழங்கப்படும். கடனுதவி திட்டம் அக்டோபர் 31 வரை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த கடன்களை 4 ஆண்டுகளில் செலுத்தலாம் எனவும், முதல் ஓராண்டுக்கு தவணைத்தொகை வசூலிக்கப்படாது. மேலும்,
- குறுந்தொழில்களுக்கான முதலீடு வரம்பு 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
- சிறு நிறுவனங்களுக்கான முதலீடு வரம்பு 5 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
- நடுத்தர தொழில்களுக்கான முதலீடு வரம்பு 10 கோடி ரூபாயில் இருந்து 20 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
- ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை முன்னேற்ற 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.
- சிறுதொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளும் 45 நாட்களுக்குள் வழங்கப்படும்.
- 200 கோடி ரூபாய்க்கு குறைவான டெண்டர்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு விடப்படாது. இந்திய சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
இ.பி.எப் தொகை:
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கான பி.எப் தொகையை மத்திய அரசே செலுத்தும். நிறுவனங்கள் செலுத்தும் பி.எப் தொகை 12% ல் இருந்து 10%ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் மூலம் 3.67 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், 77.22 லட்சம் பேர் பயன்பெறுவர் எனவும் நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார்.
நிதி ஒதுக்கீடு:
- வங்கிசாரா நிதி மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
- மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறச் செய்துள்ள மின்சார விநியோக நிறுவனங்களுக்கு ரூ. 90,000 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
- ரயில்வே, சாலை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்து உள்ளார்.
- புதிய மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதவிக்காலம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
- அரசு கட்டங்கள் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பணிகளை முடிக்க 6 மாத காலம் நீட்டிக்கப்பட்ட அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
- டிடிஎஸ் பிடித்தம் 25% குறைக்கப்படுவதாகவும் இது நாளை முதலே அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்களிடையே கூடுதலாக 50,000 கோடி ரூபாய் பணம் புலரும் வாய்ப்பு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு தேதி ஜூலை 31ல் இருந்து நவம்பர் 30 ஆக மாற்றப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |