எய்ட்ஸ் போல கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் – உலக சுகாதார அமைப்பு..!

0

கொரோனா வைரஸ் ஒரு போதும் நம்மை விட்டு நீங்காது எனவும் உலக மக்கள் அதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் நிர்வாகி மைக்கேல் ரேயன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா நீங்காது:

கொரோனா வைரஸ் எப்போது நம்மை விட்டு நீங்கும் என்பதை கூறுவது கடினம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. மனித சமூகத்தில் உள்ள மற்றொரு கொடிய வைரஸாக கொரோனா மாறியுள்ளது, இது நம்மை விட்டு ஒருபோதும் நீங்காது. எச்.ஐ.வி., வைரசும் நம் சமூகத்தில் தான் உள்ளது அது மறையவில்லை. அதுபோல் தான் கொரோனா வைரசும் நம்மை விட்டு எங்கும் செல்லாது என கூறப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு உலகில் சிறப்பாக செய்லபடுத்தப்படுகிறது.

உலகளவில் 3 லட்சத்தை நெருங்கிய உயிரிழப்புகள் – கொரோனவால் நடுங்கும் உலக நாடுகள்..!

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் எனவும், ஊரடங்கை தற்போது தளர்த்துவது நல்ல முடிவு என சில நாடுகள் நினைப்பது ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்புப் பணியில் உள்ள சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது. மேலும் கொரோனா நமக்கு பல நல்லவற்றையும் கொடுத்துள்ளது. தீமைகளையும் கொடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here