நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு 7 வருடங்களுக்கு பிறகு இன்று அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு குற்றவாளிகள் இருந்த மனநிலை குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
நிர்பயா வழக்கு விபரம்:
டில்லியில் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயாவை முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய நால்வரும் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் தூக்கி வீசினர். பின்னர் அந்த மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ஒருவர் சிறுவர் ஆவார். அவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். இன்னொரு குற்றவாளி நீதிமன்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மீதமுள்ள நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இன்று தூக்கு:
நிர்பயா குற்றவாளிகளுக்கு ஏற்கனவே 3 முறை தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்படுவது குறித்து அறிந்த அவர்கள் நேற்று மாலை முதலே தேநீர் கூட அருந்தாமல் பயத்தில் நடுங்கி உள்ளனர்.
மேலும் அவர்கள் பதட்டமடைந்து கதறி உள்ளனர். இதனால் தனித்தனி சிறைக்கு மாற்றப்பட்ட அவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்ள முயற்சி செய்த்துள்ளனர். இதனால் அவர்களை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். பின்பு அவர்கள் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |