தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து வெப்பத்தின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்த நிலையில் மக்கள் வெளியில் தலைகாட்டவே பயந்தனர். அந்த அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், மக்களை குளிரூட்டும் விதமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போவதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வலுவலுப்பா இருக்கு நாட்டுக்கட்டை மேனி., அதில் மினுமினுப்பை ஏத்தி காட்டி, கிறங்கடிக்கும் ரேஷ்மா!!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான, சென்னை, நீலகிரி, கடலூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், புதுசேரி, செங்கல்பட்டு, திருப்பூர், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.