தமிழ்நாடு கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் http://www.trb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் நாளை (ஜூன் 6) முதல் ஜூலை 5ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் பி.எட் அல்லது பணி சார்ந்த பாடப்பிரிவில் Degreeயை பெற்றிருக்க வேண்டும். வருகிற ஜூலை 1ம் தேதி வரை 40 வயதிற்கு உள்ளவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகையும் உண்டு. விண்ணப்பக் கட்டணமாக SC/ST பிரிவினருக்கு ரூ.300ம், மற்ற பிரிவினருக்கு ரூ.600 நிர்ணயித்துள்ளனர்.
இதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு Compulsory Tamil Language Eligibility Test, Written examination, Certificate Verification ஆகிய முறையில் தேர்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.