தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்தே கோடை வெயில் அதிகமாக காணப்பட்ட நிலையில் அதற்கு விடுப்பு கொடுக்கும் விதமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களான சென்னை, சேலம், திண்டுக்கல், செங்கல்பட்டு, தஞ்சை, விழுப்புரம், நாகை, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கோவை, திருவள்ளூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த தகவலை அறிந்த விவசாயிகள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(02.05.2023) – முழு விவரம் உள்ளே!!