தமிழ்நாட்டில் நகர்புறங்களை தொடர்ந்து கிராம புறங்களிலும் ஏ/சி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மின்வாரியத்துறை தகவல் தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் வாட்டர் ஹீட்டர், ஏ/சி உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்தும் வீடுகளுக்கு கூடுதலாக மின் கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மின் நுகர்வோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உண்டாக்கி வருகின்ற நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளது.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம் (02.05.2023)., முழு விவரம் உள்ளே!!!
அதாவது “இது முற்றிலும் தவறான தகவல். இது போன்ற எவ்வித நடவடிக்கையும் மின்வாரியம் மேற்கொள்ளவில்லை. செய்திகளின் உண்மைத்தன்மை அறியாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம்.” என எடுத்துரைத்துள்ளனர்.