பாண்டியன் ஸ்டோர்ஸ்:
மூர்த்தியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் புது வீடு கட்டுவதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று ஜனார்த்தனன் ஒரு பக்கம் காய் நகர்த்தி வருகிறார். இப்படியான விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் போய்க்கொண்டிருக்கும் நிலையில் மீனாவை சந்தித்து அவரது அப்பா ஜனார்த்தனன் என்னோடு வா என்று சொல்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுக்கு மீனா அவரை கடுமையாக திட்டி விடுகிறார்.வீட்டிற்கு வந்த பிறகு தன அப்பாவை திட்டியதை நினைத்து மீனா கவலைப்படுகிறார். அதை பார்த்த தனம் எல்லாம் சரியா போயிடும் என்று அவருக்கு ஆறுதல் கூறுகிறார். இப்படியான நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குறித்து புதிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அனைவரும் சேர்ந்து ஜனார்த்தனன் தான் நாம் இப்படி கஷ்டப்படுவதற்கு காரணம் என அவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் திட்டுவார்களாம். அதைப் கேட்டு பொறுக்க முடியாத மீனா என் அப்பாவை திட்டுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லைனு பேசுவாராம். இனி வரும் கதைகளை இப்படி தான் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.