ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் புது நாயகி – யார் தெரியுமா??

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் பல்வேறு புதுமுகங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டுமாக இந்த தொடரில் மற்றுமொரு புதுவரவு வரப்போகிறது என அறிவிப்புகள் வந்துள்ளது.

செம்பருத்தி தொடர்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் தொடர் ‘செம்பருத்தி’. ஆரம்பத்தில் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகள் இருந்தது. செம்பருத்தி தொடரில் ஹீரோவாக பிரபல தொலைக்காட்சி நடிகர் கார்த்திக்ராஜ் நடித்து வந்தார். நடிகையாக கேரளாவைச் சேர்ந்த ஷபானா ஷாஜகான் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகரின் அம்மாவாக, முன்னாள் வெள்ளித்திரை நடிகையான நடிகை ப்ரியா ராமன் நடித்து வருகிறார். இது தவிர சின்னத்திரை  நடிகர் கதிர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்த தொடரில் நடித்து வந்த நடிகர் கார்த்திக் ராஜ் முற்றிலுமாக செம்பருத்தி தொடரை விட்டு விலகினார். இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. நடிகர் கார்த்திக்ராஜ் நடித்து வந்த ஆதி என்ற கதாப்பாத்திரத்தில் விஜே அக்னி நடித்து வருகிறார்.

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி – 11 ரயில்கள் ரத்து!! முழுவிபரம்!!

தொடர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜனனி திடீரென ‘செம்பருத்தி’ தொடரிலிருந்து விலக்கப்பட்டார். இவர்கள் இருவரும் தொடரை விட்டு விலகியதற்கான சரியான காரணம் ‘செம்பருத்தி’ குழுவின் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு குறையத்துவங்கியது.

அதனால் செம்பருத்தி தொடரின் குழுவினர் இந்த தொடரில் புதுப்புது கதாபாத்திரங்களை இறக்கி மக்களை மீண்டுமாக ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் புதுவரவு ஒன்று செம்பருத்தி குடும்பத்துடன் இணையவுள்ளது. ஐஸ்வர்யா என்ற நடிகை இந்த தொடரில் இணையுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here