இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி – 11 ரயில்கள் ரத்து!! முழுவிபரம்!!

0

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து சில ரயில்களை குறிப்பிட்ட நாட்களுக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. தற்போது அதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை ரயில் பாதை:

தற்போது ரயில்வே துறை தமிழகத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளை துவங்கி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் அந்த பணிகள் அனைத்து முடங்கின. தற்போது வைரஸின் தாக்கம் குறைந்து வருவதால் அந்த பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. அந்த பணிகளுக்காக குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் சில ரயில்களை தற்போது ரத்து செய்துள்ளனர். அதன்படி தற்போது 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன்படி வரும் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை திருச்சி-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை மதுரை-திருநெல்வேலி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாகர்கோவில்-மதுரை சிறப்பு ரயில் உட்பட அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை பெங்களூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் மற்றும் விருதுநகர்-நாகர்கோவில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘தனிநபர் உரிமைகள் பாதுகாப்பாக இருக்கும்’ – வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதி!!

மேலும் வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாகர்கோவில்-பெங்களூர் சிறப்பு ரயில் மற்றும் விருதுநகர்-நாகர்கோவில் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற 26,27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நாகர்கோவில்-கோயம்புத்தூர் சிறப்பு ரயில் மற்றும் நாகர்கோவில்-மதுரை ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here