கரூரில் நடந்த போராட்டம் – எம்.பி ஜோதிமணி உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் அதிரடி கைது!!

0

கரூரில் போராட்டம் நடத்தி வந்த எம்.பி ஜோதிமணி மற்றும் 100கும் மேற்பட்ட காங்கிரஸ் உறுப்பினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால் தற்போது அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

எம்.பி ஜோதிமணி:

கரூரில் எம்.பி ஆக ஜோதிமணி திகழ்ந்து வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேலும் கரூரில் லைட் கவுஸ் கார்னர் பகுதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினரால் ஓர் காந்தி சிலை நிறுவப்பட்டது. தற்போது அந்த சிலை மிக பழமையானதால் அதனை மாற்ற முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அந்த சிலை அகற்றப்பட்டது. மேலும் புதிய சிலை வைப்பதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய சிலை வைப்பதற்கான பீடத்தின் கட்டுமான பணிகள் தரமான முறையில் இல்லை என்று எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டினார். மேலும் இதனால் தற்போது அவர் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருடன் சேர்ந்து 100கும் அதிகமான காங்கிரஸ் உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இங்கு போராட்டம் நடத்துவதால் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் எனவே போராட்டத்தை நிறுத்துமாறு கூறினர்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

ஆனால் அவர்கள் அதனை கேட்பது போல் தெரியவில்லை. எனவே போலீசார் ஜோதிமணியை குண்டுக்கட்டாக தூக்கி அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அங்குள்ள 100கும் மேற்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து பேசிய ஜோதிமணி கூறியதாவது, போலீசார் எம்.பி மீது கைவைக்கவில்லை. தமிழகத்தின் ஒரு பெண் மீது கைவைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். தற்போது அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here