‘புரெவி புயல்’ அப்டேட் : டிச.4 இல் கன்னியாகுமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும்!!

0
Cyclone
Cyclone

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று இரவு புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் புயல் வரும் டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புரெவி புயல்:

தமிழகத்தில் கொரோனா பரவல், நிவர் புயல் என அடுத்தடுத்து பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தற்போது வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் புரெவி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து துறை அதிகாரிகளிடமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இலங்கையில் இருந்து 460 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர தொடங்கி உள்ளது. இப்புயல் டிசம்பர் 4ம் தேதி கன்னியாகுமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும் எனவும், டிசம்பர் 2ம் தேதி இலங்கை, மன்னார் வளைகுடா பகுதியிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டு உள்ளது.

14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

இதன் விளைவாக 75 முதல் 95 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள், கடலோர மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தற்போது இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 860 கிமீ தொலைவில் நிலை கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here