எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு இடைக்கால தடை – நீதிமன்றம் உத்தரவு!!

1

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவையிலுள்ள கடன் தொகையை செலுத்தக்கோரி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘நெஞ்சம் மறப்பதில்லை’

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிகை ரெஜினா கசான்ட்ரா, நடிகை நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

த்ரில்லர் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாவதில் தொடர்ச்சியாக பல சிக்கல்கள் எழுந்து வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மார்ச் மாதம் 5ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டுமாக இப்படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

’80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்’ – தமிழக தேர்தல் ஆணையர் தகவல்!!

நிலுவையிலுள்ள கடன் தொகையை செலுத்தக்கோரி ரேடியன்ஸ் வீடியோ நிறுவனம், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இப்படத்தை தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் 1.24 கோடி கடன் வைத்துள்ளதால், கடன் முழுவதையும் செலுத்தக்கோரி, இப்படம் வெளியாவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here