நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் அரிவாள் வெட்டு…, மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் அரிவாள் வெட்டு..., மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் அரிவாள் வெட்டு..., மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

தமிழகத்தில், கடந்த ஜூன் மாதம் 13ம் தேதியில் இருந்து 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளியில், மாணவர்கள் அரிவாள் வெட்டு, சாதி மோதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, வள்ளியூரில் உள்ள பள்ளியில் ‘சின்னதுரையைப்போல அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும்’ என்று பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவரை குறிப்பிட்டு ஆசிரியர் கூறியதால், நாங்குநேரியை சேர்ந்த சக மாணவர்கள் சிலர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால், சின்னதுரையை பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அறிந்த, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வள்ளியூர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்த விவகாரம் குறித்த விரிவான விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளார். மேலும், நெல்லை மாவட்டத்தில் சாதிய மோதல்கள் உள்ள பள்ளிகளை கணக்கெடுத்து காவல்துறை கண்காணிப்பில் விட உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, சாதியை வெளிப்படுத்தும் கயிறு, பட்டை போன்றவற்றை மாணவர்கள் அணிவதை தடுப்பது, பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சமூகத்தில் சாதி தான் முக்கியமா போச்சு.., நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் விடுத்த ஜிவி பிரகாஷ் குமார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here