நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதற்கு காரணம் நீலகிரி மாவட்டம் எச்.பி.எப், தலைகுந்தா, ரோஸ் மவுண்டன் பகுதியில் புலி நடமாட்டம் அதிகமாக தென்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இந்த புலிகள் மேய்ச்சலில் உள்ள கால்நடைகளையும் வேட்டையாடி கொன்று வருகிறது. குறிப்பாக 5 மாதங்களில் மட்டும் 18க்கும் மேற்பட்ட கால்நடைகளை புலி தாக்கி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளும் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் அரிவாள் வெட்டு…, மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!