சமூகத்தில் சாதி தான் முக்கியமா போச்சு.., நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் விடுத்த ஜிவி பிரகாஷ் குமார்!!

0
சமூகத்தில் சாதி தான் முக்கியமா போச்சு.., நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் விடுத்த ஜிவி பிரகாஷ் குமார்!!
சமூகத்தில் சாதி தான் முக்கியமா போச்சு.., நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் விடுத்த ஜிவி பிரகாஷ் குமார்!!

முனியாண்டி.என்பவர் தனது மனைவி அம்பிகா மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகியோருடன் நாங்குநேரி பெருந்தெருவில் வகித்து வருகின்றனர். அவர்கள் பிள்ளைகள் வள்ளியூரில் ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த ஒருவாரமாக சின்னத்துரை பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளான். இதை கண்டித்த பெற்றோர்களிடம் பிளஸ் 2 மாணவர்கள் தன்னை சிகரெட் வாங்கி வர சொல்லி சண்டை போடுவதாக கூறியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் பெற்றோர்கள் புகார் கொடுத்த நிலையில் ஆத்திரம் அடைந்த பிளஸ்-2 மாணவர்கள் சின்னத்துரை மற்றும் அவர் சகோதரியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். உயிருக்கு போராடிய இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2வது நாளாக போராட்டம்., ST சாதி சான்றிதழ் வேண்டும்?

இந்நிலையில் இந்த விஷயத்திற்கு கண்டனம் கொடுக்கும் விதமாக ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here