புல்லின் மீது படர்ந்த பனித்துளியாக தோற்றம் தரும் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் நாயகி… மனதை தொலைத்த ரசிகர்கள்!!!

0

ஜீ தமிழ் டிவியில் மக்களின் பேராதரவோடு ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம். இந்த சீரியலில் அனு கதாபத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் தர்சனா அசோகன். இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புற்களின் நடுவில் எடுத்து கொண்ட அழகும் கொஞ்சும் தனது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கதையின் கருப்பொருள் என்னவென்றால் 40 வயது பணக்கார ஆண் மகனுக்கும் 20 வயது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும்  இடையே ஏற்படும் காதல், அதனால் அந்த பெண் சந்திக்கும் பிரச்சனைகள் இதனை மையமாக கொண்டது.

மேலும் இவர்களின் காதலை பிரிக்க சிலர் செய்யும் சதியை முறியடித்து குடும்பத்தினரின் ஒப்புதலுடன் இந்த காதல் திருமணத்தில் முடியுமா என்ற கோணத்தில் கதை நகர்கிறது. இந்த சீரியல் பணக்கார தொழிலதிபராக நடிகர் ஜெய் ஆகாஷ் மற்றும் நடுத்தர வர்க்க இளம் பெண்ணாக தர்சனா அசோகன் நடித்து வருகின்றனர். இவர்களுடன் மேலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.மேலும் இந்த சீரியல் இளசுகளையும் கவர்ந்த ஒன்றாகும்.

இந்நிலையில் இந்த சீரியல் நாயகி தர்சனா அசோகன், புற்களின் நடுவில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். புற்களின் இடையே பாவாடை தாவணியில் அந்த புல்களின் மீது படர்ந்த பனித்துளியாக காட்சி தருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரிடம் மனதை பறிகொடுத்து உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here