நீட் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

0

செப்டம்பர் 27 இல் நடக்க உள்ள நீட் தேர்வை மறுசீராய்வு செய்யக்கோரி தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீட் தேர்வு

கொரோனா தொற்று காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து செப்டம்பர் 13 இல் நடக்கவிருக்கும் நீட் தேர்வுகளை நடத்த கூடாது என தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் சேர்ந்து மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

high court
high court

ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தில் 11 மாணவர்கள் மனுதாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என நீட் தேர்வுக்கு எதிராக செய்யப்பட்ட அனைத்து மனுதாக்கல் ஆகஸ்ட் 17 இல் தள்ளுபடி செய்தனர்.  இதனால் ஆங்காங்கே அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

NEET EXAM
NEET EXAM

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் நீட் தேர்வை மறுசீராய்வு செய்யக்கோரி மனுதாக்கல் செய்தது. அந்த மனுவில் கொரோனா தொற்றில் தேர்வுகளை நடத்துவதில் மாணவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை உச்சநீதிமன்றம் உணர வேண்டும். இதனால் தொற்று மேலும் பரவும் நிலை ஏற்படலாம். மாணவர்களின் வாழ்வாதார உரிமையை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு அசோக் பூஷன், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் செப்டம்பர் 13 இல் நீட் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here