Thursday, May 16, 2024

ஐ.பி.எல் தொடரில் இருந்து ஹர்பாஜன் சிங் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

Must Read

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த பின்னடைவாக அணியின் மூத்த விளையாட்டு வீரராக கருதப்பட்ட ஹர்பாஜன் சிங் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

வரும் செப்டம்பர் 19 ஆம் தேதியில் இருந்து துபாயில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு துபாய்க்கு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட இருந்த போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதில் 2 விளையாட்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அணியில் உள்ள அனைவரும் சுயதனிமைக்கு தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.

இதனை அடுத்து அணியின் முக்கிய வீரராக கருதப்பட்ட சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இவரையடுத்து தற்போது சென்னை அணியின் சிறந்த வீரராகவும் மூத்த வீரராகவும் இருக்கும் ஹர்பாஜன் சிங் தான் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இரண்டாவது வீரர் விலகல்:

இன்று மாலை தனது அதிகாரபூர்வு ட்விட்டர் பக்கத்தில் ஹர்பாஜன் சிங் கூறியதாவது “சில தனிப்பட்ட காரணங்களுக்காக நான் போட்டிகளில் இருந்து விலக உள்ளேன். இது மிகவும் கடுமையான காலம் தான். இந்த ஐ.பி.எல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அணியின் தலைமை எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர். ஜெய் ஹிந்த்!!” என்று தெரிவித்துள்ளார்.

அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!!

இவரது இந்த விலகலை சென்னை அணியின் தலைமை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. அதில் கூறப்பட்டதாவது “அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஆன ஹர்பாஜன் சிங்க் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு உறுதுணையாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளது.

இவர் அணியின் முக்கிய வீரராக கருதப்பட்ட சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்தாக தனது விலகலை தெரிவித்துள்ளார். இது சென்னை சூப்பர் அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இவரது விலகல் பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -