பிரபல நடிகையான நயன்தாரா இப்பொழுது இணையத்தில் தனது குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா
சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நயன்தாரா பல சர்ச்சைகளை சந்தித்திருந்தாலும் தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் 5 வருடங்களுக்கு மேல் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
அதுதான் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. அரசு விதிமுறையை மீறி விட்டதாக புகார்கள் எழுந்தது. அதிலிருந்து இப்பொழுது தான் மீண்டு வந்துள்ளனர். இப்பொழுது விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். மேலும் நயன்தாரா பல படங்களில் தொடர்ந்து கமிட்டாகியுள்ளார். குழந்தை பிறந்ததுமே இவங்களுக்கு அதிர்ஷ்டம் அடுச்சுருச்சே என்று ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
மேலும் இதுவரை விக்கி-நயன் தனது குழந்தைகளின் முகத்தை காட்டியதும் கிடையாது. இப்பொழுது முகத்தை மட்டும் மறைத்து தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதுக்குள்ள குழந்தை இவளோ வளர்ந்துட்டாங்களா?? என்று ரசிகர்கள் கண்ணு வைத்து வருகின்றனர்.
View this post on Instagram