தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நயன்தாரா. பல படங்களில் வெற்றி வாகை சூடி லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று பாராட்டப்படும் இவர், தற்போது ஹிந்தி மொழியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்து படங்களை தயாரித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி தயாரிப்பு, நடிப்பு என அனைத்திலும் அசத்தி வரும் இவர் இப்போது தியேட்டர் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. அதாவது சென்னையில் பிரபலமாக இயங்கி வந்த அகஸ்தியா தியேட்டர் மூடப்பட்டிருந்தது. ஆனால் இந்த தியேட்டரை இப்போது நயன்தாரா வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு புறப்படும் இந்திய வீரர்கள்…, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக பிசிசிஐயின் திட்டம்!!
மேலும் இந்த தியேட்டர் உள்ள இடத்தில் புதிதாக இரண்டு தியேட்டர்களை கட்டி அடுத்த ஆண்டு திறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதலில் நடிப்பு, பின் தயாரிப்பு என கலக்கிய நயன்தாரா இப்போது தியேட்டரையும் வாங்கியுள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தவிர இவர் “சாய் வாலே” என்ற டீக்கடையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.