தற்போது திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் என்றால் அது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தான். இவர்களின் திருமணம் எப்பொழுது என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் நயன்தாரா தேசிய விருது வாங்கிய பிறகே திருமணம் என்று ஸ்ட்ரிட்டாக சொல்லி விட்டாராம்.
நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நயன்தாரா. ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக திரையுலகில் வலம் வருகிறார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்தவர்.
வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – ரசிகர்கள் ஷாக்!!
ஆரம்பத்தில் சிம்புவை காதலித்து வந்த நயன்தாரா சில கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார். மேலும் சில பிரபலங்களுடனும் கிசுகிசுக்கப்பட்டர். இதனால் பல பிரச்சனைகளும் ஏற்பட்டது. அதன் பிறகு தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் நயன்தாரா.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. எங்கு சென்றாலும் ஒன்றாக தான் செல்வார்கள். விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு கூட கோவா சென்று கொண்டாடினர்.
விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு 25 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார் நயன்தாரா. இதையும் தாண்டி இவரக்ளின் திருமணம் எப்பொழுது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். ஆனால் நயன்தாராவோ தேசிய விருது வாங்கிய பிறகே திருமணம் என்று கூறிவிட்டாராம். இதனால் விக்னேஷ் சிவன் கவலையில் இருக்கிறாராம். எப்படியாவது திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று யோசித்து கொண்டிருக்கிறாராம்.