ஆஸ்திரேலியாவில் இருந்து தாய் நாட்டிற்கு திரும்பி உள்ள கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா மேட்ச்:
பெரும் அளவில் எதிர்பார்ப்பிற்கு உள்ளன இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் கடந்த சில நாட்களாக விளையாடி வந்தன. இதில் ஆரம்பத்தில் இந்தியா அவ்வளவாக சரியாக விளையாடவில்லை. அதே போல் முக்கியமாக கருதப்பட்ட வீரர்கள் சில பல காரணங்களுக்காக தாயகத்திற்கு திரும்பினர். இதனை அடுத்து புதிய முகங்கள் பலரும் ஆட்டக்களத்தில் பங்கேற்று விளையாடினர்.
ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!
இதில் தமிழகத்தை சேர்ந்த நடராஜனும் ஒருவர். மிக சிறிய குடும்பத்தில் பிறந்த நடராஜன் தனது அயராத உழைப்பு காரணமாக கிரிக்கெட் துறையில் நுழைந்து தனக்கு என்று ஒரு தனி பெயரினை எடுத்துள்ளார். தனது முதல் ஆட்டத்திலேயே அவர் அபாரமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். இப்படியான சூழலில் அடுத்தடுத்து அவரது விளையாட்டு திறனால் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய வீரர்கள் அனைவரும் இந்தியாவிற்கு திரும்புகின்றனர். நடராஜன் ஆஸ்திரேலியாவில் இருந்த போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவர பின்பற்றி தான் வந்தார். அதன் பிறகு, தமிழகம் திரும்பிய நடராஜனுக்கு அவரது மாவட்டத்தினர் மற்றும் ரசிகர்கள் அமர்க்களமான வரவேற்பினை அளித்தனர். இதனை அடுத்து நடராஜன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.