பழனியில் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய நடராஜன் – வைரலாகும் புகைப்படம்!!

0

இந்தியா அணியின் இடம் பிடித்த தமிழக வீரர் நடராஜன் தற்போது பழனி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் மொட்டை அடித்து தனது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்.

நடராஜன்:

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் மூலம் சர்வதேச போட்டிகளில் இந்தியா அணியின் நடராஜன் அறிமுகமானார். அவர் தான் அறிமுகமான போட்டி முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டி 20 தொடரை இந்தியா அணி கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும் டெஸ்ட் அணியிலும் கடைசி போட்டியில் இடம் பிடித்து, டெஸ்ட் தொடரிலும் தனது பௌலிங்கில் அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியா தொடருக்கு பின்பு தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வந்தார் நடராஜன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அங்கு அவருக்கு 2 வெள்ளை குதிரைகள் அடங்கிய சாரட் வண்டி மூலம் வரவேற்கப்பட்டார். மேலும் அவருக்கு அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் மக்கள் மிக உற்சாகமான வரவேற்பை அளித்தனர். இந்தியா தேசிய கோடியை கையில் ஏந்தியபடி நடராஜன் வலம் வந்தார். மேலும் தேசிய கொடிக்கு முத்தமிட்டுமுள்ளார். இந்திய அணியில் இடம் பிடித்தது, சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது என தொடர்ச்சியாக சிறப்பான தருணத்தை கழித்து வருகிறார் நடராஜன். தற்போது நடராஜன் தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பழனி சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் மொட்டை அடித்து தனது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here