விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் ”நாம் இருவர் நமக்கு இருவர்’. இந்த தொடரில் நடித்து வந்த நடிகை ரஷ்மிகாவுக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சீரியல் நடிகைக்கு திருமணம்

கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல சீரியல் நடிகை ரஷ்மிகா. கொரோனா ஊடங்கிற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’. இந்த தொடரில் பிரபல சீரியல் நடிகர் செந்தில், ‘மாயன்’ மற்றும் ‘அரவிந்த்’ என்ற இரு விதமான வேடங்களில் நடித்து அசத்தி வந்தார். அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மற்றும் ரக்ஷா ஹொல்லா ஆகியோர் நடித்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சில காரணங்களால் இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, அதே பெயருடன் வேறு கதைக்களத்தோடு தற்போது ஒளிபரப்பாகிறது. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ பகுதி ஒன்றில் அரவிந்த் என்ற கதாபாத்திரத்துக்கு ஜோடியாக தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரஷ்மிகா நடித்து வந்தார். இவரது நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.

சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் – டிடிவி தினகரன் தகவல்!!

இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது ரசிகர்களை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியது. தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ”நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகை ராஷ்மிகா தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்களை வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரஷ்மிகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here