முதல்வர் கெஜ்ரிவால் மகளிடம் பண மோசடி – கைவரிசையை காட்டிய மர்ம நபர்!!

0

டெல்லி முதலமைச்சராக இருக்கும் கெஜ்ரிவாலின் மகளிடம் மர்ம நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் பணமோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவால்:

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பல திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார். தற்போது அனைத்து பகுதிகளிலும் ஆன்லைன் மூலம் பணமோசடி நடத்துவது அதிகமாகி வருகிறது. தற்போது இதேபோல் ஓர் சம்பவம் கெஜ்ரிவால் வீட்டில் நடந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் மகள் தான் ஹர்ஷிதா என்பவர். இவர் சில தினங்களுக்கு முன்பாக தனது சோபாவை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக விளம்பரம் அளித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை பார்த்த நபர் ஒருவர் ஹர்ஷிதாவிடம் சோபாவை வாங்க அணுகினார். மேலும் அவரது வங்கிக்கணக்கில் அதற்கான பணத்தையும் செலுத்தினார். இந்நிலையில் அவர் ஹர்ஷிதாபோனிற்கு ஒரு QR code ஐ அனுப்பி அதன்மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 34 ஆயிரத்தை திருடியுள்ளார். இதனால் பதறிய ஹர்ஷிதா டெல்லி சிவில் லைன் போலீசாரிடம் புகார் அளித்தார்.

சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் – டிடிவி தினகரன் தகவல்!!

தற்போது இதுகுறித்து விசாரித்த போலீசார் இதனை ஆன்லைன் மூலம் பணமோசடியில் ஈடுபடும் கும்பல் தான் செய்திருக்கும் என்று கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வரின் வீட்டிலே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here