சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் – டிடிவி தினகரன் தகவல்!!

0

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது உடல்நலம் சரியாகி உள்ளார் சசிகலா. அவரது உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் தன்னிடம் விசாரித்தார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சசிகலா:

சிறை தண்டனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு பெங்களூரு இல்லத்தில் சசிகலா ஓய்வு எடுத்து வந்தார். பின்பு நேற்று பெங்களுருவில் இருந்து சசிகலா நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார். அவர் வரும் பொழுதே பல சர்ச்சைகளை கிளப்பி வந்தார். தனது காரில் அதிமுக கொடியை பறக்கவிட்டு வந்தார். இதற்கு தமிழக காவல்துறை எச்சரித்தும், அவர் அதை கண்டுகொள்ளாமல் அதிமுக கொடி பறக்கவிடப்பட்ட காரில் தான் தமிழகம் வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகம் வந்த சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். இங்கு வந்த சசிகலா முதலாவதாக ராமவாரத்தில் உள்ள மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர்களை தூவி தனது மரியாதையை செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியுள்ளார். பின்பு தியாகராய நகர் இல்லத்திற்கு சசிகலா சென்றார்.

‘எம்.ஜி.ஆர் வழியில் ஒருதாய் பிள்ளைகளாய் செயல்பட வேண்டும்’ – வாணியம்பாடியில் சசிகலா பேட்டி!!

தற்போது தினகரன் ஓர் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அதிமுகவில் இன்னும் ஸ்லீப்பர் செல்ஸ் உள்ளார்கள், அவர்கள் எம்எல்ஏ.,வாக மட்டும் இருப்பார்கள் என்று அர்த்தம் அல்ல அது அதிமுக நிர்வாகியாக கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா உடல் நலம் குறித்து ரஜினிகாந்த் தன்னிடம் தொலைபேசி மூலம் விசாரித்தார் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here