பிப்ரவரி 10ஆம் தேதி காணொளி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தொடர் – மத்திய அரசு அறிவிப்பு!!

0

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் அமைச்சரவை கூட்டம் வரும் 10ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை கூட்டம்:

கடந்த ஜனவரி 29ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கப்பட்டது. ஆளுநர் உரையுடன் ஆரம்பித்த அதன் நடவடிக்கைகள் அதன்பிறகு தேதி குறிப்பிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. இக்கூட்டத்தொடரானது ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை ஒரு அமர்வாகவும், மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை ஒரு அமர்வாகவும் நடத்திமுடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

 

குக் வித் கோமாளி புகழ், ஷிவாங்கி இப்படி பட்டவங்களா?? ரித்திகா ஓபன் டாக்!!

இந்நிலையில் வரும் 10ம் தேதியன்று காணொளி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2.15 மணிக்கு கூடவுள்ள இக்கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பூசி பற்றிய விவாதத்தோடு, விவசாயிகள் போராட்டம், பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நிகழ்ந்த சச்சரவுகள் ஆகியன குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here