விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளியும் ஒன்று. இந்நிலையில் தற்போது அதில் புதிதாக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்துள்ளனர் ரித்திகா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி ரித்திகா
குக் வித் கோமாளி நிகழ்ச்சி வாரந்தோறும் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் பிரபலமடைந்து வருகின்றனர். போன சீசனில் ரம்யா பாண்டியன் இந்த சீசனில் அஸ்வின் என கலக்கி வருகின்றனர். அஸ்வினுக்கு தற்போது இன்ஸ்டா பக்கத்தில் 1 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதனை கொண்டாடும் விதமாக அவருக்கு செட்டில் கேக் கட் செய்து கொண்டாடினர். ஷிவாங்கி அஸ்வின் பற்றி தான் தற்போது ரசிகர்கள் அதிகம் பேசிக்கொண்டும் உள்ளனர். மேலும் புகழ் காமெடி, பாலா பன்ச், மணிமேகலையின் அரட்டை அனைத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பெரிய தூண் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்திருக்கும் ரித்திகா லைவ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். தனக்கு இந்த குக் வித் கோமாளி வாய்ப்பு அதிர்ஷ்ட வசமாக கிடைத்ததாகவும் கூறியுள்ளார். இதில் கலந்துகொண்டதும் தனக்கு பாலோவர்ஸ் கூடி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் ரித்திகா.
விவசாயிகள் போராட்டத்தில் பிரியங்கா மௌனம் காப்பது ஏன்?? மியா கலிஃபா கேள்வி!!
அதன் பிறகு குக் வித் கோமாளியின் ஷிவாங்கி மற்றும் புகழை பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்ப ரித்திகா அழகாகவே பதில் சொல்லியுள்ளார். அதாவது ஷிவாங்கி ரொம்ப ஸ்வீட்டான பொண்ணு எனவும் புகழ் நிகழ்ச்சியில் எப்படி இருக்கிறாரோ அதே போல் தான் நேரிலும் என்றும் கூறியுள்ளார். மேலும் பலரும் இந்த வாய்ப்பிற்காக ரித்திகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.