தொடர்ந்து உயரும் பங்குச்சந்தை நிலவரம் – 50 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்!!

0

பங்குச்சந்தை வணிகம் இன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் புள்ளிகள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. தற்போது அதன்படி பங்குச்சந்தை இன்று புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர்.

பங்குச்சந்தை:

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் படு குஷி அடைந்து வருகின்றனர். மேலும் நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் வரலாற்று சாதனை படைத்து அசத்தியுள்ளது. ஆனால் நேற்று காலை தொடக்கத்தில் பங்குச்சந்தை புள்ளிகள் சரிவுடன் தான் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பங்கு சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் மூலம் இந்தியா பொருளாதாரம் வளர்ச்சி அடைவதை நம்மால் அறிய முடிகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இன்றைய நிலவரப்படி பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியுள்ளது. தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 350 புள்ளிகள் உயர்ந்து 50,979.74 புள்ளிகளாக தற்போது வர்த்தம் தொடங்கியுள்ளது. மொத்த வர்த்தகத்தில் இது 0.72 சதவீதம் அதிகமாகும். இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிலவரப்படி 85.0 புள்ளிகள் உயர்ந்து 14,981.25 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியுள்ளது. மொத்த வர்த்தகத்தில் இது 0.57 சதவீதம் அதிகமாகும்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – 7 பேரின் விடுதலை மனு நிராகரிப்பு!!

சென்செக்ஸ் புள்ளி பட்டியலில் இருக்கும் முதல் 30 நிறுவனங்களின் அதிகபட்சமாக எஸ்பிஐ பங்குகள் அதிக அளவில் தற்போது விற்பனை ஆகியுள்ளது. மேலும் அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கி 12.90 சதவீதமும், இந்துஸ் இண்ட் வங்கி 2.80 சதவீதமும், கோட்டக் வங்கி 2.07 சதவீதமும், எச்டிஎப்சி வங்கி 1.99 சதவீதமும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரத்தில் அதிக சதவீதமாக காணப்பட்ட எம் & எம் மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தற்போது சரிவை கண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here