மௌன ராகம் சீரியலில் வருண் சக்தியை திருமணம் செய்வதை நினைத்து மிகவும் சந்தோஷமடைகிறார். தருணுக்கு இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்றும் தெரியவில்லை.
மௌன ராகம்
வருணுக்கும் சக்திக்கும் நாளைக்கு திருமணம் நடக்க இருக்கும் நிலையில் சக்தியிடம் தன் மனதில் உள்ளவற்றை பேசிக்கொண்டிருக்கிறார். இதனை தருணால் தாங்க முடியவில்லை. சக்தியை அவ்வளவு காதலித்து விட்டு அவரை கடைசியில் அண்ணன் திருமணம் செய்துக்கொள்வது கொடுமையான விஷயம் தானே.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் வருண் இருக்கும் சந்தோசத்தை பார்த்து தருணுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேலும் வருண் சக்திக்காக கிஃப்ட் ஒன்றை தருகிறார். அதனை வாங்கிக்கொண்டு சக்தி மேலே சென்றதும் தருணை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார்.
அதன் பிறகு ஷீலாவும் மனோகரும் பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது மனோகர் கார்த்திக்கை நினைத்து கோவமடைகிறார். நியாயம் தர்மம்னு கார்த்திக் பக்கமே நின்னு உன்னோட புருஷனையும் ஜெயிலுக்கு அனுப்பி கடைசில கார்த்திக் இப்படி பண்ணிட்டாரு என்று சொல்கிறார்.
இதனால் ஷீலாவுக்கு மிகவும் கோவமாகிறது. உன் பையன் கல்யாணம் நீ நெனச்ச மாதிரி சந்தோஷமாக நடக்காது, நான் நெனச்ச மாதிரி தான் நடக்கும் என்று கூறுகிறார். அடுத்ததாக ஷீலா கார்த்திக்கிற்கு கால் செய்து திருமணத்திற்கு வரும்படி சொல்ல கடைசியில் கார்த்திக் சக்தியை மனதில் நினைத்து வருவதாக சம்மதிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.