இந்திய அணி வருகிற ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதனை தொடர்ந்து இலங்கை சுற்றுக்கு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை பிசிசிஐ அறிவித்துள்ள்ளது.
இந்திய அணி:
வருகிற நாட்களில் இந்திய அணி பல தொடர்களை விளையாடவுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து தொடருக்கு அனைத்து முன்னணி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இலங்கைக்கு எதிரான தொடருக்கு அதிக இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவலினால் இளம் இந்திய வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் இலங்கை தொடருக்கு ஷிகர் தவான் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்து தொடருக்கு செல்லும் அணியுடன் சென்று விடுவார். இதன் காரணமாக இலங்கை தொடருக்கு யார் பயிற்சியாளராக திகழ்வார் என்று ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நீட்டித்து வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
போன வருஷம் வந்தது டுப்ளிகேட்டாம், இதுதான் ஒரிஜினல் கொரோனாவாம்..! இணையத்தை கலக்கும் வைரல் மீம்ஸ்!!
தற்போது அவர்களது குழப்பம் நீங்கும் வகையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை அறிவித்துள்ளது. அதன்படி புதிய பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பல முறை இளம் இந்திய அணியினரை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இலங்கை தொடருக்கான இந்திய அணி இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி 20 போட்டிகளை விளையாடவுள்ளது.