மௌனராகம் 2 – சக்தியால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிடும் வருண் – அப்போ சக்தி தான் வருணுக்கு ஜோடியா??

0

மௌன ராகம் சீரியலில் காதம்பரியின் சதியால் தற்போது சக்திக்கு இருந்து ஒரு வாய்ப்பும் போய்விட மனம் உடைந்து போகிறார். அடுத்ததாக வருணின் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுகிறார்.

மௌன ராகம்

வருண் பெண் பார்க்கும் விஷயத்தில் தொடர்ந்து அவமான படுவதால் மனம் உடைந்து வீட்டை விட்டு செல்கிறார். மொபைலும் சுவிட்ச் ஆப் என்று வர வீடே பதட்டமாகிறது. தவறான முடிவை எடுத்து விடுவாரோ என்று பயப்படுகின்றனர். மனோகர், தருண் என ஆளுக்கு ஒரு இடமாக சென்று தேடுகின்றனர். அடுத்ததாக சக்தி கடவுளிடம் தன் அம்மாவை காப்பாற்றும்படி மன்றாடி பாட்டு பாடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிறகு வருண் 20 மாடி கட்டிடத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சிக்கிறார். தன்னால் இனி யாரும் கஷ்டப்பட கூடாது என்றும் தான் உயிரோடு வாழ்வதற்கு அர்த்தமும் இல்லை என்று நினைக்கிறார். உங்களுக்கு தருண் இருக்கான். உங்க எல்லா அசையும் அவன் நிறைவேற்றி வைப்பான் என்றும் கூறுகிறார். அந்த கட்டடத்தின் செக்யூரிட்டி மனோகருக்கு கால் செய்து சொல்ல மனோகர் காரை எடுத்துக்கொண்டு வருகிறார்.

அப்பொழுது அந்த பக்கம் வரும் சக்தி வருணை பார்த்து விட்டு மேலே வருகிறார். வருண் குதிக்கும் நேரத்தில் சரியாக அங்கு வந்து விடுகிறார். யார் என்று வருண் ஆச்சரியமாக பார்க்கிறார். மனோகரும் வந்து விட சக்தி அங்கு இருப்பதை பார்த்து ஒளிந்துகொள்கிறார். வருண் யார் நீ எனக்கு இப்போ சாகனும், என்று சொல்ல சக்தி இதெல்லாம் தவறு என்று எடுத்துரைக்கிறார்.

ராதிகாவுக்கு செய்த சத்தியம் சரியா?? தவறா?? பதட்ட நிலையில் கோபி! எழிலிடம் சிக்குவாரா??

ஆனால் தன் அம்மா சின்ன வயதில் கண்முன்னாடியே இறந்ததை பற்றி கண்கலங்கி சொல்கிறார். அதன் பிறகு அதனால் ஏற்பட்ட பிரச்சனையையும் சொல்கிறார். இதனால் தன்னை அனைவரும் கேவலப்படுத்தியதையும் சொல்கிறார். கஷ்டத்துக்கு எல்லாரும் தற்கொலை பண்ணிக்கிட்டா உலகத்துல யாரும் இருக்க மாட்டாங்க.

தன் வாழ்க்கையில் நடந்த சோகமும், தன் அம்மா தற்போது உயிருக்கு போராடுவதையும் பற்றி சொல்ல வருணுக்கு மனசு மாறுகிறது. இதனை மனோகர் கேட்டு பூரித்து போகிறார். மேலும் வீட்டில் உள்ளவர்களை தவிர யாரிடமும் நான் பேசியது கிடையாது. ஆனால் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் என்று சொல்கிறார். அடுத்ததாக நன்றியும் கூறுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here