தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான கே.வி.ஆனந்த் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கே.வி.ஆனந்த்
தமிழ் திரையுலகில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை சந்தித்து வருகிறோம். எஸ்.பி.பியில் ஆரம்பித்து விவேக் வரை பல கலைஞர்களை இழந்து வருகிறோம். இப்படி இருக்க ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் இன்று காலை 3 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகை மேலும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ராதிகாவுக்கு செய்த சத்தியம் சரியா?? தவறா?? பதட்ட நிலையில் கோபி! எழிலிடம் சிக்குவாரா??
பல முன்னணி இயக்குனர்களுடன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் கே.வி.ஆனந்த். இவருக்கு 54 வயதான நிலையில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழில் சக்கை போடு போட்ட கோ, அனேகன், காப்பான் போன்ற திரைப்படங்கள் அவர் கைவண்ணத்தில் உருவானது தான். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தையே மக்களுக்கு வழங்கியுள்ளார். பல விருதுகளையும் குவித்துள்ளார் கே.வி.ஆனந்த். இப்படி பட்ட கலைஞரை திரையுலகம் இழந்துள்ளது வருத்தத்திற்குரியதே. மேலும் பிரபலங்கள் யாவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.