ராதிகாவுக்கு செய்த சத்தியம் சரியா?? தவறா?? பதட்ட நிலையில் கோபி! எழிலிடம் சிக்குவாரா??

0

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அவ்வளவு சொல்லியும் ராதிகா வீட்டிற்கு செல்கிறார். மேலும் இத்தனை நாள் நீ கஷ்டப்படுவதற்கு முழு காரணம் நான் தான் என்றும் கூறி அழுகிறார் கோபி.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. ராதிகா வீட்டிற்கு செல்லும் கோபி என்ன பிரச்சனை வந்தாலும் உன்னை விட்டு போக மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார். இதனால் தன் குடும்பம் தன்னை விட்டு பிரிந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்கிறார். சின்ன வயதில் உன்னை விட்டு போகலைனா, இன்னைக்கு உனக்கு இந்த நிலைமை வந்து இருக்காது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த குற்ற உணர்ச்சி எனக்கு இப்போ வரைக்கும் இருந்துட்டே இருக்கு. இன்னொரு தடவை அந்த தவறை செய்ய மாட்டேன் என்றும் கூறுகிறார். இதனால் ராதிகா சமாதானமும் ஆகிறார். அடுத்ததாக எழிலுக்கு அமிர்தா கால் செய்து பேசுகிறார். கதையை பற்றி விசாரிக்க ஆரம்பித்து பேசிக்கொண்டே உள்ளனர்.

அப்பொழுது அமிர்தாவின் அம்மா பார்க்கிறார். அடுத்ததாக உள்ளே சென்று ஒரு போட்டோவை பார்த்து விட்டு கண்கலங்கி விட்டு செல்கின்றனர். அடுத்ததாக பாக்கியா வீட்டில் அனைவரும் சிரித்து பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது கோபி வருகிறார். குடும்பமே சிரிப்புடன் இருப்பதை பார்த்து குற்ற உணர்ச்சியாகிறது.

சூப்பரான அசைவ ஸ்னாக்ஸ் ரெசிபி – டேஸ்டியான “இறால் வடை”!!

தன்னால் இவர்களின் சந்தோசம் கெட்டு போக கூடாது. நான் செய்த சத்தியம் இவர்களுக்கு தெரிந்தால் இவர்களின் நிம்மதி கெட்டுவிடும். இவர்களுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது. அதே போல தன்னால் ராதிகாவையும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் நினைத்து கொள்கிறார். தான் தவறு செய்து விட்டோமோ என்ற நினைப்பு கூட கோபிக்கு வருகிறது. ஆனால் என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.

அடுத்ததாக இனியா தனது ஸ்கூலுக்கு எதாவது ஸ்பெஷலாக எடுத்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார். மேலும் எழிலின் கதையை வீட்டில் உள்ளவர்கள் ஆர்வமாக கேட்டுக்கொண்டுள்ளனர். பாக்கியா ராதிகா வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவு எடுக்க கோபியிடம் தன்னை அழைத்து போக சொல்லி சொல்கிறார். ஆனால் கோபிக்கு ராதிகா வீட்டிற்கு தான் செல்கிறார் என்ற உண்மை தெரியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here