டெல்லி அணிக்கு எதிராக, அரை சதம் விளாசிய ரோஹித் சர்மா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டதுடன், தோனி மற்றும் யூசுப் பதான் வரிசையில் முதலிடத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.
ஆட்ட நாயகன்:
நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது, ஓவரின் கடைசி பந்து விறுவிறுப்பாகவும், மிகுந்த பரபரப்புடன் வெற்றி யார் பக்கம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், ஐபிஎல்லின் 16 வது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணியானது மோதியது. இந்த இரு அணிகளும், ஐபிஎல் தொடருக்கான புள்ளிக் கணக்கை திறக்காமல், தொடர் தோல்வியை மட்டுமே சந்தித்து இருந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால், இந்த போட்டி மூலம், எந்த அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வந்தது. இவ்வளவு எதிர்பார்ப்பு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில், 173 ரன்களை சேஸிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசி பந்தில், திரில்லிங்கான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில், ரோஹித் சர்மா, ஐபிஎல் அரங்கில் 25 வது இன்னிங்ஸிக்கு பிறகு அரைசதம் (65) விளாசினார்.
மீண்டும் டாப் 10- ஐ விட்டு வெளியேறிய பி வி சிந்து…, தரவரிசையில் இந்திய இளம் வீரர் முன்னேற்றம்!!
இந்த அரைசதமானது, மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததால், ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இவர், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (19) ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரரானார். இந்த பட்டியலில், தோனி 17 மற்றும் யூசுப் பதான் 16 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.