மீண்டும் டாப் 10- ஐ விட்டு வெளியேறிய பி வி சிந்து…, தரவரிசையில் இந்திய இளம் வீரர் முன்னேற்றம்!!

0
மீண்டும் டாப் 10- ஐ விட்டு வெளியேறிய பி வி சிந்து..., தரவரிசையில் இந்திய இளம் வீரர் முன்னேற்றம்!!
மீண்டும் டாப் 10- ஐ விட்டு வெளியேறிய பி வி சிந்து..., தரவரிசையில் இந்திய இளம் வீரர் முன்னேற்றம்!!

உலக பேட்மிண்டன் தரவரிசையில், இந்தியாவின் இளம் வீரரான பிரியன்ஷு ரஜாவத் முன்னேற்ற அடைந்துள்ளார். ஆனால், பி வி சிந்து டாப் 10 இடத்தை விட்டு வெளியேறினர்.

பேட்மிண்டன் தரவரிசை:

சர்வதேச அளவில் நடைபெற்று வரும், பேட்மிண்டன் தொடர்களில், சிறந்து விளங்கும் வீரர்கள் அடிப்படையில், தரவரிசையை புதுப்பித்து வெளியிட்டு உள்ளது. இந்த தரவரிசையில், சமீபத்தில் நடந்த, ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் 20 இடங்கள் முன்னேறி 38 வது இடத்தை பிடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த ஆடவர் ஒற்றையர் தரவரிசையில், H S பிரணாய் 9வது, கிடாம்பி ஸ்ரீகாந்த் 23 வது மற்றும் லக்ஷ்யா சென் 24 வது இடத்தில் உள்ளனர். மேலும், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில், 9வது இடத்தில் இருந்த பி வி சிந்து, மீண்டும் 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, ஜோடி 6வது இடத்தை தக்க வைத்துள்ளனர்.

CSK vs RR: நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கம்…, நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

மகளிர் இரட்டையர் பிரிவில், ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு பிறகு, தரவரிசையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here