தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதியுறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் தமிழ் புத்தாண்டையொட்டி நாளையும் (ஏப்ரல் 13), ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21, 22ம் தேதிகளிலும் இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு., நாளை 71,000 பேருக்கு பணி நியமனம்!!!
இதன் மூலம் பொதுமக்கள் எளிய முறையில் பயணம் செய்ய உள்ளதால் போக்குவரத்து துறைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.