வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில், 160 ரன்களை சேஸிங் செய்த இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 44 பந்தில் 10 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 83 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த அபார ஆட்டத்தினால், ஆட்ட நாயகன் விருதையும் இவர் தட்டிச் சென்றுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பாலியல் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை.., இனி உங்களுக்கு இது கிடையாது.., ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!!!
இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் அடைந்துள்ளார். இதிலும், குறைந்த இன்னிங்ஸில் இந்த பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 51 டி20 போட்டிகளில் 12 முறை சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். ஆனால், விராட் கோலி 115 போட்டிகளில் 15 முறையும், ரோஹித் சர்மா 148 போட்டிகளில் 11 முறையும் இந்த ஆட்ட நாயகன் விருதை வென்று முதல் மற்றும் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.