நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அரசு என்னதான் கடுமையான தண்டனைகள் கொடுத்தாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இப்படி இருக்கையில் தற்போது ராஜஸ்தான் முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் இனி வரும் நாட்களில் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல், அத்துமீறல், பலாத்காரம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இவர்களுக்கு இனி எந்த வகையிலும் அரசு பணிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.