அமெரிக்க நிறுவனமான மாடர்னா நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து வெளியிட்டது. தற்போது அந்த தடுப்பூசியே உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் போராடுகிறது என்று ஓர் தகவலை வெளியிட்டுள்ளது.
உருமாறிய கொரோனா:
கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்தே இந்த உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. மேலும் அதனை அவசர கால பயன்பாட்டிற்காக பயன்படுத்த நாட்டின் அரசு அனுமதியும் வழங்கியுள்ளது. தற்போது இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இது முந்தய கொரோனாவை விட 70 சதவீதம் வீரியம் மிகுந்துள்ளது. மேலும் இது மனிதர்களின் உயிரை பறிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மாடர்னா நிறுவனம்:
தற்போது உருமாறிய கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. இது குறித்து அமெரிக்க நிறுவனம் மாடர்னா ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால்,”கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தும் தடுப்பூசியே உருமாறிய கொரோனாவிற்கு எதிராக போராடுகிறது. இது முதல் கட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனவை கட்டுப்படுத்த உதவுகிறது.
தென் தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான தடுப்பூசி செயல்பாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்காமல் செயல்படுகிறது. ஆனால் தென் ஆப்ரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை குறைகிறது. ஆனால் 2 வது டோஸேஜின் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நம்பலாம். மேலும் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக தற்போதைய தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.